Saturday, November 10, 2012

காதல் என்றால் காயம் என்றுதான் அர்த்தமோ என்னவோ..
கண்ணில் தண்ணீர் வரும் வரை சிரித்த நாட்கள் போஹி..
கண்ணீருடன் தூங்கா நாளை காண நெஞ்சம் தவிக்கும் காலம்..

Wednesday, June 20, 2012

உனக்காக..

உயிரோடு கலந்தவளே..
முள்ளில் பட்ட துணியை போன்று கிள்ளி எடுத்தாய்..
உயிரை அல்ல என்னுள் சிக்கிக் கிடந்த துன்பத்தை..

என் வாழ்வில் வந்த வசந்தம் நீ என கொண்டேன்..
என்றும் உன் நினைவால் வாடினேன்..
உனை சேரும் நொடி.. எங்கே..
நெஞ்சம் உருக தவித்தேன்..

கொண்ட நேசம் கலையாதிருட்க என்னில் கண்டேன் மாற்றம்:

வந்ததும் காதல் வந்திடும் ஏக்கம்.
நெஞ்சின் ஓரம் கசிந்ததிடும் மயக்கம்.
இதழில் இருக்கும் ஒரு தயக்கம்.
என்னவள் எனும் உனை கண்டால் பதட்டம்.
உன் அப்பா என்றால் வரும் நடுக்கம்.

காதலா.. நீ காணும் அனைத்தும் இப்போது எனக்கும்..
காலம் கடக்க..

என்னில் பிழை கண்டாய்!
அன்பில் குறை கண்டாய்!
காதலில் கறை கொண்டாய்!
இப்பொழுது மறை என சென்றாய்!

எந்நிலையிலும் உன் மீது கொண்ட காதல் குறையா..
உன்னவன் உனக்காக மட்டும்..
உருக உருக கிறுக்கியது..


//இவ்வளவு நாளாய் சிறு சிறு ஹைக்கூ கவிதைகளை பொழுதுபோக்கிட்காய் கிறுக்கிக் கொண்டிருந்த நான் அதே நோக்கதிட்காய் ஒரு சிறு எத்தனிப்பு.. பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதியுங்கள். தேங்க்ஸ் :D Note: No hard feelings :P //

First post

I am guy who really want smile on everyone's face at any instance. I'll inshallah try to share my thoughts and experience with you all through this blog. If it was fair enough to enjoy(smile) please do not fail to do it.

Thank You!
I_am_not Sam Lee